ஹற்றன் நகருக்குத் தேவையான சமையல் எரிவாயு (Gas) போதுமான அளவு கிடைக்காத காரணத்தினால், அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நகரின் எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு புதிய கையிருப்பு வரவுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து, பெருமளவிலான மக்கள் நேற்று (21ஆம் திகதி) காலை முதலே நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர். எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் தமது சிலிண்டர்களை வரிசையில் அடுக்கி வைத்துவிட்டு, நீண்ட நேரமாகப் பொறுமையுடன் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.






