ஏப்ரல் மாதம் ஒரு லீட்டர் டீசலின் விலை 550 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை உயரக்கூடும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜெயசேகர எச்சரித்துள்ளார்.
இவ்விவகாரம் குறித்துப் பேசிய அவர்,
ஏப்ரல் 7-ஆம் திகதி நாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் டீசல் சரக்கின் விலை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது உள்ளூர் எரிபொருள் விலைகளை உயர்த்தும் என்று கூறினார்.
மேலும் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் நிற்பது உள்ளிட்ட தற்போதைய நிலைமை, அரசாங்கம் கொள்முதலை உரிய நேரத்திலும் முறையாகவும் நிர்வகிக்கத் தவறியதன் விளைவே ஆகும் என்றும் குற்றம் சாட்டினார்.






