Dubai International Airport அருகே ஈரானிய ட்ரோன் தாக்குதல் இடம்பெற்றதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து ஏற்பட்ட பெரிய தீ விபத்தினால், விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Dubai Civil Aviation Authority பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
Dubai Media Office வெளியிட்ட அறிக்கையில், தங்களது விமானங்களின் தற்போதைய நிலை தொடர்பான சமீபத்திய தகவல்களை அறிய பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிலைமை முன்னேறும் போது அதிகாரப்பூர்வ வாயில்களின் மூலம் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






