இன்று (09) காலை வரையான காலப் பகுதியில் சுமார் 220,000 மின் பாவனையாளர்களுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.
தென் மாகாணத்தின் சில பகுதிகளிலும் மத்திய, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில பகுதிகளிலும் இந்த நிலைமை காணப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதற்கான பணிக்குழுக்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.