Date:

நாட்டின் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்??

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

நிலவும் போர்ச் சூழலால் நாட்டின் சில பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்வதைக் காணமுடிகிறது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், எரிபொருள் விநியோகத்தில் எவ்வித சிக்கலும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதி மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படுவதில்லை எனவும், எனவே மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் அச்சமடைவதற்கு எவ்வித காரணமும் இல்லை. கையிருப்பிலுள்ள முழுமையான அளவுகளை நாங்கள் கணித்துள்ளோம். எம்மால் ஒரு மாத காலத்திற்குத் தடையின்றி இயங்க முடியும். எங்களிடம் உள்ள மற்றும் தற்போது நாட்டை வந்தடைந்து கொண்டிருக்கிறது.

எனவே 37 நாட்களுக்கு தேவையான பெற்றோலும், 35 நாட்களுக்கு தேவையான டீசலும் கையிருப்பில் உள்ளது.

அத்துடன் 47 நாட்களுக்கு தேவையான விமான எரிபொருளும் கையிருப்பில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலதிகமாக எந்தவொரு கப்பலும் வராவிட்டாலும் கூட, எம்மால் இந்தக் குறிப்பிட்ட நாட்களுக்கு எவ்வித இடையூறுமின்றி எரிபொருளை விநியோகிக்க முடியும்.

அடுத்ததாக, நாம் இறக்குமதி செய்யும் பெட்ரோல், டீசல் போன்ற சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்கள் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருவதில்லை. கப்பல் கட்டணம் மற்றும் தூரம் அதிகமாக இருப்பதால் நாம் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் கொரியா ஆகிய நாடுகளில் இருந்தே இவற்றை இறக்குமதி செய்கிறோம். மசகு எண்ணெய் இறக்குமதியில் மட்டுமே பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது, இருப்பினும் எங்களிடம் உள்ள கையிருப்பு ஒரு மாதத்திற்குப் போதுமானதாகும்.

எனவே மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking சற்றுமுன் அதிகரித்த எரிபொருள் விலை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (28) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள...

#BREAKING | குவைத் விமான நிலையத்தில் ஈரான் தாக்குதல்! #TamilNews | #Iran | #KuwaitAirport | #Israel

குவைத் விமான நிலையத்தில் ஈரான் தாக்குதல்...

தோஹா, கட்டார் விசேட அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை அடுத்து தோஹா, கட்டாரில்...

அம்பாறையில் திடீரென உருவானது எரிபொருள் வரிசை…

அம்பாறையில் திடீரென உருவானது எரிபொருள் வரிசை... மத்திய கிழக்கில் பதற்றம் என்பதால் எரிபொருள்...