வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மாகாணம், ஊவா மாகாணம், சபரகமுவ மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், அம்பாறை மாவட்டம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய சில பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கு அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.






