இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மதிஷ பத்திரன, இம்முறை நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகப்பட்டுள்ளார்.
அவரது இடது காலின் தொடைப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாகவே தொடரிலிருந்து இவ்வாறு விலகப்பட்டுள்ளார்.
கடந்த 16ஆம் திகதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற இலங்கை அணியின் மூன்றாவது போட்டியின் போது, மதிஷ பத்திரன இந்த உபாதைக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.






