இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று (15) இரவு நடைபெறவுள்ள போட்டியினைப் பார்வையிட, முறையான அனுமதிப்பத்திரம் (நுழைவுச்சீட்டு) இல்லாத ரசிகர்கள் எவரும் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வருவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
போட்டி தொடர்பான அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ள போதிலும், பலர் இன்றைய தினத்தில் நுழைவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்வதற்காக மைதானத்திற்கு அருகில் வந்து கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக, முறையான அனுமதிப்பத்திரம் இன்றி மைதானத்திற்கு அருகில் வந்து அசௌகரியங்களுக்கு உள்ளாக வேண்டாம் என அவர் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.






