Date:

பொங்கல் தினத்தில் ஜனாதிபதி வடமாகாணம் பயணம்

தைப்பொங்கல் தினமான, 15ஆம் திகதி, வடமாகாணத்துக்கு செல்லவுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மூன்று பொங்கல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

 

இதன்படி, மன்னார் மாவட்டத்தின், திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இடம்பெறும் தைப்பொங்கல் நிகழ்வில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

 

அன்று பிற்பகல் யாழ்ப்பாணம் வேலனை முருகன் ஆலயத்தில் இடம்பெறும் தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதுடன், மானிப்பாய் மருதாணி ஆலயத்தில் இடம்பெறும் பொங்கல் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.

 

இதேவேளை, வடக்கு மாகாணத்திற்கு வருகைதரும் ஜனாதிபதி அத்துமீறிய இந்தியக் கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு தீர்வுதர வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

அகில இலங்கை கடற்றொழில் மற்றும் கமத்தொழில் சமாசத்தின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவருமான என்.பி.சுப்பிரமணியம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணனி அன்பளிப்பு!

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...

காவல்துறை பாதுகாப்புடன் டெல்லி செல்லும் தளபதி விஜய்!

இந்தியாவின், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு விசாரணைக்காக...

மூடப்பட்ட அறுகம்பை இஸ்ரேலர்களின் சபாத் இல்லம்!

பொத்துவில் அறுகம்பையில் இயங்கி வந்த இஸ்ரேலர்களின் வணக்க வழிபாடுகள் இடம்பெற்று வருவதாக...

EPF பணம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ், ஓய்வூதிய திட்டத்தினூடாக சலுகைகளை வழங்குவதற்கான திட்டமொன்றை...