Date:

புனித ஹஜ் வழிகாட்டல் கருத்தரங்கு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் ஹஜ் உம்ரா குழு இணைந்து, 2026 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்வதற்கு திணைக்களத்தில் பதிவு செய்துள்ள களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த யாத்திரிகர்களுக்கான
கருத்தரங்கு 2025 டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஜாமிஆ நளீமியா ADRT கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஜாமீஆ நளீமியாவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அஷ்ஷேக் அறபாத் கரீம் நளீமி அவர்களால் ஹஜ் தொடர்பான உரை நிகழ்த்தப்பட்டது.

சவூதி அரேபியாவில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் ஆலோசனைகளும் பயணம் தொடர்பான அறிவுரைகள் பற்றி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கணக்காளர் எஸ்.எல்.எம். நிப்ராஸினால் கருத்தரங்கு நிகழ்த்தப்பட்டதோடு,
திணைக்கள உத்தியோகத்தர்களான கே.ஏ.சப்ரி,
எம்.ஐ.கியாஸ், எஸ்.எம்.ஜாவித், எம்.ரமீஸ் மற்றும் ஏ.சீ.எம். ரியாஸ் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன்போது அதிகளவிலான யாத்திரிகர்கள் கலந்து கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இக் கருத்தரங்கில் 2026 ஆம் ஆண்டு ஹஜ் செல்லவுள்ள யாத்திரிகர்களுக்கு ஹஜ் கடமைகளை முறையாக நிறைவேற்றுவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதுடன், சவூதி அரேபியாவில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் பயணத்துடன் தொடர்புடைய தேவையான அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

இறுதியாக முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அஷ்ஷேக் முப்தி முர்சி நன்றியுரை நிகழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டக்ளஸூக்கு 72 மணிநேர தடுப்புக்காவல்

கைதான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலும் விசாரிக்க 72 மணி...

பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட அறுவர் கைது

சீதுவையில் உள்ள இரவு விடுதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல்...

வெடிகுண்டு அச்சுறுத்தல் பீதியை ஏற்படுத்தும்…

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல், பொதுமக்களிடையே பீதியை...

அனர்த்த நிலையால் வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சாதாரண மக்கள் பயன்படுத்தும் சிறிய ரக வாகனங்களின் விலையைக் குறைக்க அரசாங்கம்...