Date:

டக்ளஸூக்கு 72 மணிநேர தடுப்புக்காவல்

கைதான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலும் விசாரிக்க 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிப்பு.

2019 ஆம் ஆண்டு பிரபல பாதாள உலகக் குற்றவாளியான மாகந்துரே மதுஷிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, ஒரு நவீன ரகத் துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.

குறித்த துப்பாக்கியின் இலக்கங்களைச் சோதித்த போது, அது 2001 ஆம் ஆண்டு இராணுவத்தினால் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்டது என்பது உறுதியானது.

தனது பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி எவ்வாறு ஒரு பாதாள உலகக் கும்பலின் கைக்குச் சென்றது என்பது குறித்து சிஐடியினர் கேட்ட கேள்விகளுக்கு டக்ளஸால் முறையான விளக்கங்களை அளிக்க முடியவில்லை. அதன் காரணமாகவே முன்னாள் கடற்றொழில் அமைச்சரும், ஈபிடிபி (EPDP) கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, பாதாள உலகக் கும்பலுக்கு துப்பாக்கி வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) வெள்ளிக்கிழமை(26) கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட அறுவர் கைது

சீதுவையில் உள்ள இரவு விடுதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல்...

வெடிகுண்டு அச்சுறுத்தல் பீதியை ஏற்படுத்தும்…

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல், பொதுமக்களிடையே பீதியை...

அனர்த்த நிலையால் வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சாதாரண மக்கள் பயன்படுத்தும் சிறிய ரக வாகனங்களின் விலையைக் குறைக்க அரசாங்கம்...

நாட்டில் டிசம்பர் 29 முதல் வானிலையில் பாரிய மாற்றம்

டிசம்பர் மாதம் 29ஆம் திகதி முதல் நாட்டின் ஊடாக கிழக்கு திசையிலான...