சீரற்ற வானிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த உயர்தரப்பரீட்சையின் முதல் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, விடைத்தாள் மதிப்பீட்டின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.






