Date:

களனி கங்கையின் நீர்மட்டம் சிறு வெள்ள மட்டம் வரை குறைந்தது

களனி கங்கையின் நீர்மட்டம் தற்போது சிறு வெள்ள மட்டம் வரை குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாகலகம் வீதி நீர்மானியில் நீர்மட்டம் இன்று பிற்பகல் 02:00 மணியளவில் 6.9 அடியாக இருந்ததாகவும், பிற்பகல் 03:00 மணியளவில் அது 6.75 அடியாகக் குறைந்துள்ளதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஹங்வெல்ல நீர்மானியில் நீர்மட்டம் இன்று பிற்பகல் 02:00 மணியளவில் 7.14 அடியாக இருந்ததுடன், பிற்பகல் 03:00 மணியளவில் அது 7.07 அடியாகக் குறைந்துள்ளது. எனினும் இது தொடர்ந்தும் அவதான மட்டத்தில் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக களுகங்கை, மல்வத்து ஓயா உள்ளிட்ட நீர்நிலைகளிலும் நீர்மட்டம் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தந்திரமலை நீர்மானியில் நீர்மட்டம் இன்று பிற்பகல் 02:00 மணியளவில் 8.24 அடியாக இருந்ததுடன், பிற்பகல் 03:00 மணியளவில் அது 8.19 அடியாகக் குறைந்துள்ளது.

எவ்வாறாயினும், மல்வத்து ஓயாவில் தொடர்ந்தும் பெரும் வெள்ள நிலைமை நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீடுகளைச் சுத்தம் செய்வதற்கான கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிப்பு

அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பும் போது,...

“பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதியில் மாற்றமில்லை”

மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதியில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என...

பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி தொடர்பான தீர்மானம்

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியை திருத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும்...

வௌிநாட்டு நன்கொடைகளை சுங்கவரியின்றி இறக்குமதி செய்ய திட்டம்

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை...