Date:

இலங்கை – உலக வங்கிக்கு இடையில் 500 மில்லியன் அமெ. டொலர் நிதி ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கையின் விவசாய விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் வகையில் இலங்கை அரசாங்கமும் உலக வங்கியும் 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கான நிதி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.

உலக வங்கியின் தெற்காசியாவுக்கான உப தலைவர் ஹார்ட்விக் ஷாப்பர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல இன்று (03) இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இதன்போது, நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவும் கலந்துகொண்டார்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள 16 மில்லியன் மக்கள் பயனடையவுள்ளனர்.

இதன்மூலம், இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு இலட்சம் கிலோமீற்றர் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டத்திற்கு உறுதுணையளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில்...

மின் கட்டண உயர்வு – பொதுமக்கள் கருத்து

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான இலங்கை மின்சார சபையால் (CEB)...

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில்,...

நேபாளத்தில் சமூக ஊடகங்களின் மீதான தடை வாபஸ்

பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு...