Date:

தனிநபருக்கு வாரத்திற்கு, வழங்ப்பட்ட 1800 ரூபாயை, 2100 ரூபாய்

உலர்  உணவுப் பொருட்களுக்காக  தனிநபருக்கு வாரத்திற்கு, வழங்ப்பட்ட 1800 ரூபாயை,  2100 ரூபாய் வரையும்,  ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு வழங்கப்ப 3,600 ரூபாயை  10,500 ரூபாய் வரை யும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  தேசிய பேரிடர் நிவாரண சேவை மையத்தின் உதவிச் செயலாளர் ஜெயதிஸ்ஸ முனசிங்க தெரிவித்தார்.

பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் இந்த வரம்பிற்கு உட்பட்டு உலர் உணவுப் பொருட்களை வழங்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய , பாதுகாப்புச் செயலாளர் கையொப்பமிட்ட சுற்றறிக்கை 1 (2025) இல் நிலவும் பொருளாதார நிலைகளுக்கு ஏற்ப நிவாரண சேவைகளை வழங்குவதற்கான விலைகள் இவ்வாறு திருத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்கள் பேரிடர் நிவாரண சேவைகள் தொடர்பாக ஏதேனும் தகவல்களைப் பெற அல்லது வழங்க வேண்டியிருந்தால்,

* நேரடி தொலைபேசி எண்: 011 2665258

* பேரிடர் மேலாண்மை மையத்தை (DMC) ;  117 தொடர்புகொள்ளலாம் என  தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15)...

இன்று முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று முதல் (15) குறைவடையும் என...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம்!

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு...

பால் மாவின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக...