Date:

அரநாயக்க மண்சரிவில் 20 குழந்தைகளுடன் 120 பேர் மாயம்

அலவத்துகொடையில் நூற்றுக்கணக்கான குடும்பங்களைக் காணவில்லை! அரநாயக்க மண்சரிவில் 120 பேர் மாயம்! அரநாயக்க அம்பலாங்கந்தை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 120 பேர் காணாமல் போயுள்ளதாக அஞ்சப்படுகிறது. அவர்களில் 20 குழந்தைகளும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மண்சரிவு காரணமாக சிக்கியுள்ளவர்களை மீட்பதில் சிரமம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. அலவத்துகொடை, அங்கும்புர வீதியில் உள்ள ரம்புக்-எல பகுதியில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த மண்சரிவில் மக்கள் இடம்பெயர்ந்தமை மற்றும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ள போதிலும், அது குறித்த உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை .

அந்தக் கிராமத்தில் சுமார் 800 குடும்பங்கள் வசித்துள்ளதாகவும், தற்போது பெரும் எண்ணிக்கையிலானோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தப் பகுதிக்கு மீட்புக் குழுக்கள் செல்வதும் சிரரமாக உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம்!

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு...

பால் மாவின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக...

விமலுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்துமாறு கொழும்பு...

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மரண தண்டனை...