Date:

மட்டுப்படுத்தப்பட்ட மலையக ரயில் சேவை!

நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்தில் கொண்டு, மலையக மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் அனைத்து ரயில்களையும் கொழும்பு கோட்டை – நானுஓயா மற்றும் நானுஓயா – கொழும்பு கோட்டை வரை மட்டுப்படுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, நாளை (27) காலை கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கவிருந்த பொடி மெனிகே (காலை 5.55), உடரட மெனிகே (காலை 8.30) மற்றும் காலை 9.45 மணிக்கு புறப்படவிருந்த ரயில்கள் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுமே பயணிக்கும்.

அதேபோல், கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கும் கண்டி ஒடிஸி (காலை 9.40) ரயிலானது நானுஓயா வரை மட்டுமே பயணிக்கும்.

இதற்கு மேலதிகமாக உடரட மெனிகே (காலை 9.20), கண்டி ஒடிஸி (காலை 11.00), பொடி மெனிகே (பகல் 12.15) மற்றும் பிற்பகல் 2.16 மணிக்கான ரயில்கள் நானுஓயாவிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும்.

சீரற்ற வானிலை நீங்கும் வரை மேற்கண்டவாறு செயல்பட ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு பூட்டு

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் நாளை (27) முதல்...

மீண்டும் மூடப்படும் கொழும்பு – கண்டி பிரதான வீதி..

கொழும்பு - கண்டி பிரதான வீதி இன்று (26) இரவு 10...

கண்டி – நுவரெலியா வீதி | இடைநடுவில் பூட்டு!

கண்டி – நுவரெலியா பிரதான வீதி கெரண்டியெல்ல பகுதியில் இன்று (26)...

SJBயின் தீர்மானத்தை முழுமையாக ஏற்றுக் கொண்ட UNP!

ஐக்கிய தேசியக் கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு...