Date:

SJBயின் தீர்மானத்தை முழுமையாக ஏற்றுக் கொண்ட UNP!

ஐக்கிய தேசியக் கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எடுத்த தீர்மானத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஐ.தே.க. – ஐ.ம.ச. இணைப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனிப்பட்ட ரீதியில் முன்வந்துள்ளமை குறித்து விசேட நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

ஐ.தே.க. – ஐ.ம.ச. இணைப்பு தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, பொதுச் செயலாளர் சட்டத்தரணி தலதா அத்துகோரல மற்றும் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட குழுவொன்றை நியமிக்கவும் ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான அனைத்துக் கலந்துரையாடல்களும் மேற்கண்ட மூவர் கொண்ட குழுவினாலேயே முன்னெடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிகரம் தொடும் வாகன இறக்குமதி!

வாகன இறக்குமதிகள் எதிர்பார்த்ததை விட அதிகளவில் உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய வங்கி...

மகாவலி கங்கை அன்மித்த பிரதேசங்களுக்கு வெள்ள அபாயம்!

மகாவலி கங்கை ஆற்றுப் படுக்கையைச் சுற்றியுள்ள சில பிரதேசங்களுக்கு அடுத்த 48...

உடனடியாக வெளியேறுங்கள்! | இரண்டு பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் இரண்டு பிரதேசங்களுக்கான மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து, தேசிய கட்டட...

போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்ட பஹல கடுகன்னாவ பகுதி!

மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல...