Date:

Breaking பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி வீரர்கள் நாடு திரும்ப தீர்மானம்?

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் 16 வீரர்கள் நாடு திரும்ப தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

இஸ்லாமாபாத்தில் நேற்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணியின் வீரர்களே இவ்வாறு நாடு திரும்ப முடிவு செய்துள்ளதாக குறிப்படப்படுகின்றது

அதேநேரம் நாளை நடைபெறும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியும் நடைபெறாது என ஶ்ரீலங்கா கிரிக்கெட் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் குறித்த தொடர் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்வதற்காக மாற்று அணியை அனுப்ப இலங்கை கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வரலாற்று சிறப்புமிக்க இலங்கை – சவுதி அரேபியா வர்த்தக மன்றம் ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க இலங்கை - சவுதி அரேபியா வர்த்தக மன்றம் ஆரம்பித்து...

ID வழங்கும் பணியை விரைவுபடுத்தவும்: ஜனாதிபதி

தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதில் தற்போது நிலவும் தாமதத்தை துரிதமாக சீரமைப்பதற்குத்...

எதிர்பார்த்த வருமான இலக்கை எட்டிய சுங்கம்!

இலங்கை சுங்கத்தினால் இந்த ஆண்டுக்குள் ஈட்டவேண்டிய வருவாய் இலக்கை நேற்றைய (11)...

பிரசன்னவுக்கு பிணை

இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (12) கைது செய்யப்பட்ட முன்னாள்...