மாகாணசபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை உறுதியாகக் கூற முடியாது, தேர்தல் முறைமை குறித்து தீர்மானம் எட்டப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை இடம்பெறும் என பொது நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.






