Date:

Just in களு கங்கையில் நீர்மட்டம் அதிகரிப்பு!

தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

காலி, மாத்தறை, களுத்துறை, கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அத்துடன் களனி, அத்தனகலு, கிங், பென்தர ஆறுகளை அண்மித்த பகுதிகளிலும் 50 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்த மழைவீழ்ச்சியால் களுகங்கையை அண்டிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ள காரணத்தால் இரத்தினபுரி, மில்லகந்த, எல்லகாவ பிரதேசங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

எதிர்காலத்தில் இந்த நீர் மட்டம் அதிகரித்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் களு கங்கையை அண்மித்த குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு...

கடமைகளை பொருப்பேற்றுக்கொண்டார் பிரதி அமைச்சர் அர்கம் இலியாஸ்!

மின்சாரம் மற்றும் எரிசக்தி பிரதி அமைச்சராக அர்காம் இலியாஸ் கடமைகளை பொருப்பேற்றுக்கொண்டார். பிரதி...

யாழ்தேவி ரயிலின் தலைமை கட்டுப்பாட்டாளர் கைது

கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், 'யாழ்தேவி' ரயிலின் தலைமை...

ரொஷான் ரணதுங்க வௌ்ளிப் பதக்கம் வென்றார்

இந்தியாவில் நடைபெற்று வரும் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று...