வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் ‘மிடிகம லாசா’ என்றழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர (வயது 38) படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் கறுப்பு ஆடையை அணிந்து வியாழக்கிழமை (23) எதிர்ப்பு தெரிவித்தனர்.
தனது காரியாலயத்தில் கடமையில் இருந்த போது, இனந்தெரியாத ஒருவர், புதன்கிழமை (22) அன்று மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் லசந்த விக்ரமசேகர மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.