Date:

வட மாகாணத்தில் முஸ்லிம் மீள்குடியேற்றம் – ரிட் மனு தள்ளுபடி

வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக, 2018ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நாகலந்த கொடிதுவக்கு மற்றும் மலிந்த சேனவிரத்ன ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று (15) தள்ளுபடி செய்யப்பட்டது.

ஏழு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கில், பலமுறை நீதிமன்ற உத்தரவுகள் வழங்கப்பட்டபோதிலும், வழக்குத் தாக்கல் செய்தவர்கள் நடைமுறைப்படி வழக்கை முன்னெடுக்கத் தவறியதால், தீர்ப்பின்றி இவ்வழக்கு நீடித்தது.

இந்த வழக்கிற்கு சட்ட அடிப்படை எதுவும் இல்லை என்றும், உண்மையான சட்டக் காரணங்களுக்காக அல்லாமல், ஊடகக் கவனத்தைப் பெறுவதற்காகவே தொடரப்பட்டது என்றும், முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா நீதிமன்றத்தில் வாதிட்டார்.

மேலும், மனுதாரர்கள் தொடர்ந்து வழக்கை முன்னெடுக்கத் தவறியதால், வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியிருந்த நிலையில், அந்தச் சமர்ப்பிப்பிற்கு இணங்க, இன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்தது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார் இஷாரா செவ்வந்தி

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

காசாவில் காயமடைந்த குழந்தைகளுக்குகடத்தல்காரர்களிடமிருந்து பெறப்பட்ட, அனைத்து தங்கம்

காசாவில் காயமடைந்த குழந்தைகளுக்கு, மருத்துவ உதவி வழங்குவதற்காக போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து பெறப்பட்ட,...

அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழைக்கிறது ஐ.தே.க

ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையில், அனைத்து எதிர்க்கட்சி...

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சற்று முன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்...