இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. இல்ஹாம் மரிக்கார் தெரிவித்தார்.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் 2025.10.5 திகதி அங்கொடையில் அமைந்துள்ள அஷ் ஷிஃபா அனாதை இல்லத்திற்கு விஜயம் செய்தனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
உலகில் வாழ்கின்ற மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்களாக காணப்படுகின்றனர்.
சிறுவர்கள் நாளைய நாட்டின் சமூகத்தை கட்டி எழுப்புகின்ற மாபெரும் சக்திகளாக காணப்படுகின்றனர். பெரியோர்களின் சிறந்த வழிகாட்டல்களே எதிர்கால நல்ல பல தலைவர்களை உருவாக்குவதற்கு முக்கிய பங்களிக்கின்றது என்றார்.
இதேவேளை, Amazon உயர்கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் இந்த சிறுவர்களோடு இணைந்து முழு நாளையும் அவர்களுடன் கழித்தனர். அவர்களுக்கு பல போட்டி நிகழ்ச்சிகளும் நடாத்தி பரிசில்களும், பகல் உணவும் வழங்கினர்.
இந்த சமூக அபிவிருத்தி திட்டத்தினை Amazon கல்லூரியின் மாணவர் குழு தலைவர் திரு Hassan Irfan தலைமையில், Amazon College & Campus சின் முழு அனுசரனையுடன் சிறப்பாக நடாத்தப்பட்டது.