Date:

ரணிலுக்கு தயிர் சட்டிகளையும், தேன் போத்தல்களையும் வாரி வழங்கிய மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்கவுக்கு பல தயிர் சட்டிகள் மற்றும் தேன் குடுவைகளை வழங்கியுள்ளார்.

சமீபத்தில் தங்கல்லவில் உள்ள மஹிந்தவின் கார்ல்டன் இல்லத்திற்கு அவரது நலம் விசாரிக்க வந்தபோது, இந்தப் தயிர் சட்டிகள் மற்றும் தேன் குடுவைகள் அவருக்கு வழங்கப்பட்டது.

சிறிது நேரம் ரணிலும், மஹிந்தவும் பேசிய பிறகு, மஹிந்த ரணில் விக்ரமசிங்கவை மதிய உணவு சாப்பிட அழைத்தார், மதிய உணவு கிராமபுற கலாசாரத்தில் தயாரிக்கப்பட்டது.

மதிய உணவின் போது, எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர். நவம்பர் மாதம் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து நடத்தும் தொடர் போராட்டங்களுக்கு பொதுஜன பெரமுனவின் ஆதரவைப் பெறுவது அவசியம் என்று ரணில் இதன்போது கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த முன்னாள் மஹிந்த , இந்த விடயம் குறித்து நாமல் மற்றும் சாகர காரியவசத்திடம் தெரிவித்து தேவையான உதவிகளை வழங்குவதாகக் கூறியுள்ளார்.

மதிய உணவுக்குப் பிறகு, அவர்கள் தயிர் மற்றும் தேனையும் இனிப்பாக சாப்பிட்டனர். அதன்பிறகு, மஹிந்த ராஜபக்ஷ, “கிராமத்திலேயே சிறந்த தயிர் மற்றும் தேன் இதோ” என்று கூறி, ரணிலுக்கு பல தயிர் சட்டிகள் மற்றும் தேன் குடுவைகளை வழங்கினார்.

ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த தயிர் சட்டிகள் மற்றும் தேன் குடுவைகளை கவனமாக கொழும்புக்கு கொண்டு வந்ததாக அறியப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிறை தென்பட்டது!

இஸ்லாமிய நாட்காட்டியின் எட்டாவது மாதமான ஷஃபான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதாக அகில...

ஆசிரியர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாள்!

2025 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, இந்த ஆண்டின் ஜனவரி 01...

நனவாகும் தோட்டத் தொழிலாளர்களின் கனவு..!

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக 2026 வரவு செலவுத் திட்டங்களுக்கு...

தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு

ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார்...