Date:

அமல் சில்வாவுக்கு பிணை

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 60 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 3 சொகுசு வாகனங்களுடன் வலானை ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

பாணந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று (29) இந்த பிணை உத்தரவை பிறப்பித்துள்ளது.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 சொகுசு வாகனங்களுடன், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா, வலானை ஊழல் தடுப்புப் பிரிவினரால் நேற்று (28) கைது செய்யப்பட்டார்.

இந்த வாகனங்கள் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் போலி எண்களில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன்போது லேண்ட் ரோவர் மற்றும் மிட்சுபிஷி ஜீப் வகைகளை சேர்ந்த 3 வாகனங்களும் மீட்கப்பட்டன.

பொலிஸார் நடத்திய ஆரம்ப விசாரணையில், இந்த வாகனங்கள் போலி ஆவணங்களுடன் அரசு நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களின் பதிவு எண்களில் பதிவு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6...

பங்களாதேஷில் மீண்டும் போராட்டம்

பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம், நேற்று ஜூலை சாசனத்தில்...

தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) மத்திய மற்றும் ஊவா...

இன்றைய தங்க விலை | ஏறிய வேகத்தில் வீழ்ச்சி…!

கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தையின் தகவலின்படி, இன்று (18) காலை தங்க...