சென்னை,கரூர் சம்பவம் திட்டமிட்ட சதி என்பதால் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று தவெக வழக்கு தொடுத்துள்ள நிலையில், தவெக கட்சியின் அங்கீகாரத்தையே ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை தந்து வருகிறது.
மேற்கண்ட மனுக்களின் மீதான விசாரணை இன்றைய தினமே நடைபெறுவது மிகப்பெரிய பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் தமிழக மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது.
கரூரில் நேற்று முன்தினம் நடிகர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், கரூர் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதில் சுகுணா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.. இதனால் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41 ஆக உயிரிழந்துள்ளது.