தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் மக்கள் சந்திப்புக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் உழிரிழந்துள்ளனர்
50இற்கு மேற்பட்டோர் கயமடைந்துள்ளனர்.
குறித்த துயரச்சம்பவம் தொடர்பில் இந்திய ஜனாதிபதி, தமிழக ஆளுநர், மத்திய அமைச்சர், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் கவலை வெளியிட்டு வருகின்றனர்
அனர்த்தத்தின் பின் விமானநிலையம் புறப்பட்டுச்சென்ற ‘த வெ க’ தலைவர் விஜயிடம் பத்திரிகையாளர்கள் இது தொடர்பில் கேள்வி எழுப்பியபோதும் அவர் பதில் ஏதும் வழங்காது சென்றுள்ளார்.