Date:

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில்: இந்தியா – இலங்கை இன்று மோதுகின்றன

ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றின் கடைசி ஆட்​டத்​தில் இன்று இரவு இந்​தியா – இலங்கை அணி​கள் துபா​யில் மோதுகின்​றன.

 

ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் நடை​பெற்று வரு​கிறது. 8 அணி​கள் கலந்து கொண்​டுள்ள இந்த தொடர் இறு​திக்​கட்​டத்தை நெருங்கி உள்​ளது. சூப்​பர் 4 சுற்​றில் முதல் இரு ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்ற சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி இறு​திப் போட்​டிக்கு தகுதி பெற்று விட்​டது.

 

சூப்​பர் 4 சுற்​றில் இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் பாகிஸ்​தானை தோற்​கடித்து இருந்​தது. நேற்று முன்​தினம் நடை​பெற்ற 2-வது ஆட்​டத்​தில் வங்​கதேச அணியை 41 ஓட்டங்கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யிருந்​தது. இந்​நிலை​யில் சூப்​பர் 4 சுற்​றின் கடைசி ஆட்​டத்​தில் இந்​திய அணி இன்று இலங்​கை​யுடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் இரவு 8 மணிக்கு துபா​யில் நடை​பெறுகிறது.

 

சரித் அசலங்கா தலை​மையி​லான இலங்கை அணி 2 ஆட்​டங்​களில் தோல்வி அடைந்து இறு​திப் போட்​டிக்கு முன்​னேறும் வாய்ப்பை இழந்​து​விட்​டது. அந்த அணி வங்​கதேசத்​திடம் 4 விக்​கெட்​ வித்​தி​யாசத்​தி​லும், பாகிஸ்​தானிடம் 5 விக்​கெட்​ வித்​தி​யாசத்​தி​லும் தோல்வி அடைந்​திருந்​தது. இன்​றைய ஆட்​டம் இறு​திப் போட்​டிக்​கான சிறந்த பயிற்​சி​யாக இந்​திய அணிக்கு அமையக்​கூடும்.

 

இறு​திப் போட்​டிக்கு தகுதி பெற்​று​விட்​ட​தால் இந்​திய அணி​யில் சில மாற்​றங்​கள் இருக்க வாய்ப்பு உள்​ளது. விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான சஞ்சு சாம்​சனுக்கு பதிலாக ஜிதேஷ் சர்​மாவுக்கு வாய்ப்பு வழங்​கப்​படக்​கூடும். அதேவேளை​யில் ஜஸ்​பிரீத் பும்​ரா​வுக்கு ஓய்வு கொடுக்க வாய்ப்பு உள்​ளது. இது ஒரு​புறம் இருக்க நடப்பு தொடரில் இந்​திய அணி​யின் பீல்​டிங்​கில் தொய்வு ஏற்​பட்​டுள்​ளது. மொத்​தம் 10 கேட்ச்​களை தவற​விட்​டுள்​ளனர். இதில் வங்​கதேச அணிக்கு எதி​ராக தவற​விட்ட 4 கேட்ச்​களும் அடங்​கும். இறு​திப் போட்டி வரும் ஞாயிற்​றுக்​கிழமை நடை​பெற உள்​ளது. இதனால் பீல்​டிங்​கில் இந்​திய அணி கூடு​தல் கவனம் செலுத்​து​வ​தில்​ முனைப்​பு ​காட்​டக்​கூடும்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீடுகளைச் சுத்தம் செய்ய வீட்டுக்கு 10,000;விபரங்களுக்கு கிளிக் செய்யவும்

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதற்கு, ஒரு வீட்டுக்கு 10,000 வழங்கப்படும்....

பேலியகொடை பாலத்திற்கு கீழ் தற்போதைய நிலை

தொடர்ச்சியான சீரற்ற வானிலைக்கு மத்தியில் போலியகொட பாலத்திற்கு அருகில் தற்போதைய நிலைமைகள்..

டித்வா புயல் தாக்கம் – மரணங்கள் 355 ஆக அதிகரிப்பு

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை...

ட்ரோன்களை பறக்கவிட வேண்டாம் – விமானப் படை

மீட்பு பணிகள் இடம்பெறும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்களை பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு...