Date:

கொழும்பு மாநகர சபை ஊழியர் ஒருவர் கைது

கொழும்பு மாநகர சபையின் அலுவலக உதவியாளர் ஒருவர், நகர சபை ஊழியர்களுக்கு ஐஸ் மற்றும் ஹெரோயின் விற்பனை செய்ததாக வலான ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நீண்ட காலமாக தனது அலுவலகத்தில் ஐஸ் மற்றும் ஹெரோயினை சூட்சுமமாக பொதி செய்து நகர சபை ஊழியர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் கெம்பல் பூங்காவிற்கு அருகிலுள்ள கொழும்பு மாநகர சபைக் கட்டிடத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார்.

வலான ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு செப்டம்பர் 22 அன்று கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், சந்தேக நபரிடம் இருந்து 20,000 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தடுப்பு உத்தரவு பெறப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபை மீது கோபா பாய்ந்தது

கொழும்பு நகரில் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு வரியை வசூலிப்பதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றைத்...

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருவதாக அத்திணைக்களம்...

சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில்...

கடலில் மிதந்து வந்த கொக்கேன் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிப்பு?

தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில், இலங்கை கடற்படையினரால் கொக்கேன் போதைப்பொருள் அடங்கியதாக...