Date:

இந்தியா-இலங்கை வெளிவிகார அமைச்சர்களுக்கிடையில் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை (UNGA) அமர்வின் ஒரு பகுதியாக, இலங்கை வெளிவிகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்காவில் நடைபெற்றது.

அமைச்சர் விஜித ஹேரத் தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் ஒரு பதிவில், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பை இந்த விவாதம் மீண்டும் உறுதிப்படுத்தியதாக கூறினார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உடன் விஜித ஹேரத் நியூயார்க்குக்கு செல்கின்றார், அங்கு ஜனாதிபதி புதன்கிழமை (24) அன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு (UNGA) இல் உரையாற்ற உள்ளார்.

ஜனாதிபதி தனது விஜயத்தின் போது ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை களையும் நடத்துவார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில்,அமைச்சர் ஹேரத் அமெரிக்க துணை வெளியுறவு செயலாளர் அலிசன் ஹூக்கரையும் சந்தித்தார்.இருதரப்புஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பகிரப்பட்ட முன்னுரிமைகளை முன்னேற்றுவது குறித்து இந்த கலந்துரையாடல் கவனம் செலுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது

காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்...

இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேகநபர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி...

மைத்திரி வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்சம் அல்லது...

டில்வினை சந்தித்தார் பிரான்ஸ் தூதுவர்

பிரான்ஸ் தூதுவர் ரெமி லெம்பர்ட் (Rémi Lambert)அவர்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின்...