புறக்கோட்டை 1 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்த பெல் ரக ஹெலிகொப்டரும் இராணுவத்திற்கு சொந்தமான 2 வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
புறக்கோட்டை 1 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் உள்ள வர்த்தக நிலையத்தில் இன்று (20) பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டது.
குறித்த கட்டிடத்தின் 3வது மாடியிலேயே தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 12 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை அறிவித்துள்ளது.