Date:

மூன்று நாடுகள் எதிர்பார்க்கும் முக்கிய போட்டி இன்று!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண இருபதுக்கு 20 போட்டி இன்று (19) நடைபெறவுள்ளது.

இந்த போட்டி அபுதாபியில் இன்று இரவு 8:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

குழு Bயில் இலங்கை முன்னிலை வகிப்பதுடன், ஆப்கானிஸ்தான் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இன்றைய போட்டிய்ல ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றால், அந்த அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

ஆப்கானிஸ்தான் 2 புள்ளிகளுடன் வெளியேறும். அப்போது, 4 புள்ளிகளுடன் இருக்கும் பங்களாதேஷ் இரண்டாவது அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.

அதேநேரம் ஆப்கானிஸ்தான் இலங்கையை வீழ்த்தினால், அது புள்ளிப் பட்டியலை மிகவும் சிக்கலாக்கும். ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால், அந்த அணியும் 4 புள்ளிகளைப் பெறும்.

அப்போது, ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்காளதேஷ் ஆகிய மூன்று அணிகளுமே தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். இந்த நிலையில், நெட் ரன் ரேட் (Net Run Rate) அடிப்படையிலேயே முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் தகுதி பெறும்.

நெட் ரன் ரேட் அடிப்படையில், ஆப்கானிஸ்தான் (+2.150) மற்றும் இலங்கை (+1.546) ஆகியவை மிகவும் வலுவான நிலையில் உள்ளன.

பங்காளதேஷ் அணியின் நெட் ரன் ரேட் (-0.270) மைனஸில் இருப்பதால், அவர்களின் வாய்ப்பு மிகவும் குறைவு.

இலங்கை அணி மிக மிக மோசமான தோல்வியைச் சந்தித்தால் மட்டுமே பங்காளதேஷிற்கு வாய்ப்பு கிடைக்கும்.

எனவே, ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால், அந்த அணியும் இலங்கை அணியும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறவே அதிக வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐக்கிய மக்கள் சக்தி தமிழ்ப் பிரிவு அலுவலகத் திறப்பு

ஐக்கிய மக்கள் சக்தி தமிழ்ப் பிரிவு அலுவலகத் திறப்புவிழா மற்றும் மேன்மைதங்கிய...

சமபோஷா கைது

ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவராக நம்பப்படும் 'சமபோஷா' என அழைக்கப்படும்...

எப்போது தேர்தல் என்று இப்போது கூற முடியாது! அமைச்சர் அறிவிப்பு

மாகாணசபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை உறுதியாகக் கூற முடியாது, தேர்தல்...

’முழு நாடும் ஒன்றாக’: 1,314 பேர்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில் 3 நாட்களில் 1,314...