Date:

புறக்கோட்டை ஹோட்டல் கழிப்பறையில் தோட்டாக்கள்!

கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள ஒரு ஹோட்டல் கழிப்பறைllயில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து 17 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

கழிப்பறையை சுத்தம் செய்யச் சென்றபோது குப்பைத் தொட்டியில் துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பதைக் கண்ட ஊழியர்கள் இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதற்கமைய செயற்பட்ட பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று தோட்டாக்களை கைப்பற்றியுள்ளதுடன் இது தொடர்பான பரிசோதனையில் 9MM வகை தோட்டாக்கள் என கண்டறியப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் கழிப்பறைக்குள் நுழைந்து குப்பைத் தொட்டியில் தோட்டாக்களை கொட்டியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொழிற்சங்க போராட்டத்தை தீவிரமாக்கும் இலங்கை மின்சார பொறியியலாளர்கள்

  இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட...

ஹொரனை பேருந்து விபத்தில் 15 பேர் காயம்

ஹொரனை - இரத்தினபுரி வீதியில் எப்பிட்டவல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில்...

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளமை உறுதி

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின்...

அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம்

அரச அதிகாரிகளுக்கு அலுவலகப் பணிகளை எளிதானதாக மாற்றும் வகையில் டிஜிட்டல் கைரேகை...