பொது பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) அருண ஜெயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்றத்தில் இன்று (10)தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா பிரேரணை அரசியலமைப்பின் விதிகளுக்கு இணங்கவில்லை என்றும் அவர் கூறினார். இருப்பினும், இந்த பிரேரணையை வேறு வடிவத்தில் கொண்டு வர முடியும் என்றும் சபாநாயகர் மேலும் கூறினார்