Date:

சம்பத் மனம்பேரிக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் கார் கண்டுபிடிப்பு

பியல் மனம்பேரியின் சகோதரர் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் கார் ஒன்று நேற்று (09) எம்பிலிப்பிட்டி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

 

எம்பிலிப்பிட்டி புதிய நகரத்தில் உள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையத்திலிருந்து குறித்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பழுதுபார்க்கும் நிலையத்தின் உரிமையாளரிடம் விசாரணை செய்த போது, ஒருவர் சில நாட்களுக்கு முன்பு வந்து காரை இங்கு விட்டுவிட்டு, சம்பத் மனம்பேரியிடம் கொடுக்குமாறு கூறிச் சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மேவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும், மித்தெனியவில் கைப்பற்றப்பட்ட ஐஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சம்பத் மனம்பேரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பியல் மனம்பேரியின் சகோதரர் சம்பத் மனம்பேரியின் கட்சி உறுப்புரிமையை நீக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள்:

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர்...

நேற்று ஈரான், இன்று கத்தார், நாளை துருக்கி. நமது நீண்ட கை எல்லா இடங்களிலும் தாக்கும்

இஸ்ரேலிய எழுத்தாளன் ஒருவன், பின்வருமாறு எழுதியுள்ளதாக அரபு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று...

எல்லயில் விபத்திற்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது

எல்ல - வெல்வாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த...

நேபாள நிலைமை தொடர்பில் ரணில் விசேட அறிக்கை

நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...