Date:

இரத்மலானை அனாதை இல்ல குழந்தைகளுக்கு ஈரான் தூதுவர் உதவி

ஈரான் நாட்டின் இலங்கைத் தூதுவர் Dr.அலி ரேஷா டெல்கோஷ் Dr. Ali Reza Delkhosh அவரது பாரியாரும் இன்று 05.09.2025 நபி பெருமானார் பிறந்த தினத்தினை முன்னிட்டு ரத்மலானையில் உள்ள Islama Home for needy and Orphanage அங்கு வளரும் 20 குழந்தைகளுக்கு தமது பாடசாலைகளுக்கான தேவையான சப்பாத்துகள், புத்தகப் பைகள் பெற்றுக் கொள்ள கிப்ட் வவுச்சர்களை வழங்கி வைத்தார்கள்.

அத்துடன் அங்கு பெறுமதி வாய்ந்த ஈரான் நாட்டு காபட் விரிப்புகளை பாடசாலை நிர்வாகத்திடம் கையளித்தனர்.

இந் நிகழ்வு கொழும்பு டைம்ஸ் ஆசிரியர் மற்றும் அரப் நியுஸ் சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹம்மட் ரசூல்டீன் தலைமையில் நடைபெற்றது.

அத்துடன் RJ ஆர்ஜே பவுண்டேஷன் றிஸ்வி அவர்களினால் மாணவர்களுக்குத் தேவையான துணி வகைகளும் அன்பளிப்பு செய்தார்.

ரத்மலானை இஸ்லாமா கோம் நீடியின் ஓப்பனேஜ் (அனாதை இல்லம் ) சபையின் செயலாளர் மொஹிடீன் காதர், மற்றும் உறுப்பினர்கள் சஜத் சாகீர், றிசான் சாலிஹ், இவ் இல்லத்தின் முகாமையாளர் முஹம்மத் இம்தியாஸ் , கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மோந்தா புயல் சூறாவளியாக வலுப்பெறுகிறது

வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. மோந்தா என்ற இந்த புயல் நாளை காலை சூறாவளியாக வலுப்பெற்று, மாலையில் ஆந்திரப் பிரதேச கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோந்தா புயல் காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

வெலிகம தவிசாளரின் பூதவுடலுக்கு சஜித் இறுதி அஞ்சலி

வெலிகம பிரதேச சபையில் பொது மக்கள் தினத்தன்று இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்...

பிக் டிக்கெட் வென்ற இலங்கையர்

அபுதாபி வாராந்திர பிரபலமான பிக் டிக்கெட் குழுக்களில் 63 வயதான வங்கியாளரான...