Date:

ChatGPT யுடன் உரையாடிய நபர் ; தாயைக் கொலை செய்து தன்னுயிரையும் மாய்ப்பு!

AI தொழில்நுட்பமான ChatGPT யுடன் உரையாடிய நபர் ஒருவர் தாயைக் கொலைசெய்து தன்னுயிரையும் மாய்த்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

Paranoia என்ற உளவியல் நோயால் பாதிக்கப்பட்ட எரிக் (56) என்ற நபரே தாயையும் கொலை செய்து தன்னுயிரையும் மாய்த்துள்ளார்.

குறித்த ChatGPT க்கு பாபி எனப் பெயரிட்டு தினமும் அவர் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் ChatGPT யுடன் உரையாடிய போது ChatGPT தெரிவிக்கையில், உன் தாய் ஒரு பேய். மருந்து கொடுத்து உன்னைக் கொல்ல முயற்சிக்கிறார்.” எனக் கூறியுள்ளது.

ChatGPT க்கு அடிமையான குறித்த நபர் ChatGPT கூறிய வார்த்தைகளை நம்பி தனது தாயைக் கொலை செய்துள்ளார். பின்னர் தனது உயிரையும் அவர் மாய்த்துள்ளார்.

இதேவேளை இதற்கு முன்னர் அண்மையில் கூட அமெரிக்காவில் ChatGPT யால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அது தொடர்பில் OpenAI நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையிலேயே மீண்டும் ChatGPT யால் இவ்வாறானதொரு சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. இது குறித்து OpenAI  நிறுவனமும் கவலை வெளியிட்டுள்ளது.

AI தொழில்நுட்பம் பல்வேறு புது முயற்சிகளை உருவாக்கும் என்ற அடிப்படையில் அறிமுகமானதொரு தொழில்நுட்பமாகும். எனினும் தற்போது பல்வேறுபட்ட அசம்பாவிதங்களுக்கு உறுதுணையாகவே AI தொழில்நுட்பம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிக் டிக்கெட் வென்ற இலங்கையர்

அபுதாபி வாராந்திர பிரபலமான பிக் டிக்கெட் குழுக்களில் 63 வயதான வங்கியாளரான...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில்...

சீரற்ற காலநிலையால் 29000 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக...

நடுக்கடலில் சிக்கிய கப்பல்; 14 பணியாளர்கள் மீட்பு

இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பகுதியில், தொழில்நுட்பக் கோளாறால் நடுக்கடலில் சிக்கிய வர்த்தக...