Date:

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து பணியாளர்கள் வேலைநிறுத்தம்

இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் நேற்று (27) நள்ளிரவு முதல் 4 கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தது.

தனியார் பேருந்துகளுடன் கூட்டு அட்டவணையில் இயங்கும் தீர்மானம் மற்றும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவும் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த கால அட்டவணை தொடர்பில் பல சிக்கல்கள் இருப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே இந்த கூட்டு அட்டவணை தயாரிக்கும் பணி நடந்ததாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் பி.ஏ.சந்திரபால தெரிவித்தார்.

தொழிற்சங்கத்தால் முன்வைக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இந்த பணிப்புறக்கணிப்பு நியாயமற்றது என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கை போக்குவரத்து சபையைச் சேர்ந்த தொழிற்சங்கம் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்தாலும் கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயங்கத் தொடங்கிய பேருந்துகள் நேற்று நள்ளிரவு முதல் வழக்கம்போல் இயங்கத் தொடங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நிலவும் குளிரான காலநிலையில் பரவும் வைரஸ் நோய்கள்!

நிலவும் குளிர்ச்சியான வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் காணப்படுவதாக சுகாதாரத்...

தங்க விலையில் இன்றும் அதிகரிப்பு – புதிய விலை இதோ

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதன் காரணமாக இலங்கையில்...

புதிய 2,000 ரூபாய் நாணயத்தாளிலுள்ள அம்சங்கள்

நாட்டின் நடைமுறையிலுள்ள 2,000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது. இலங்கை...

ரமழான் சிறப்பு சுற்றறிக்கை வெளியானது

வரவிருக்கும் ரமழான் காலத்தில் மத அனுஷ்டானங்களை நிறைவேற்ற பொது அதிகாரிகளுக்கு சிறப்பு...