Date:

8 இலட்சம் வழக்குகள் நிலுவையில்- அலி சப்ரி தகவல்

நாட்டில் எட்டு இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளபோதும் அவற்றை விசாரணைசெய்து தீர்ப்பு வழங்குவதற்கு 335 நீதிபதிகளே இருக்கிறார்கள். இதன் காரணமாகவே வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மதவாச்சியில் கடந்த 26 ஆம் திகதி நீதிமன்றக் கட்டடத் தொகுதியை திறந்துவைத்த பின்னர் உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

நீதிமன்ற வழக்குகள் தாமதமின்றி நிறைவடைவதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். அதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம்.

உலகில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டில் நீதிபதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகும். நாட்டில் 08 இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனினும் அவற்றை விசாரணை செய்து தீhப்பு வழங்குவதற்கு வெறும் 335 நீதிபதிகளே இருக்கிறார்கள். வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதற்கு இது பிரதான காரணமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

அதிரடியாக பிள்ளையானின் சாரதியும் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது...

வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை நாளை (19) அவதானம் செலுத்த வேண்டிய...

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்

மியான்மரில், வெள்ளிக்கிழமை (18) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.57 மணியளவில் (இலங்கை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373