Date:

8 இலட்சம் வழக்குகள் நிலுவையில்- அலி சப்ரி தகவல்

நாட்டில் எட்டு இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளபோதும் அவற்றை விசாரணைசெய்து தீர்ப்பு வழங்குவதற்கு 335 நீதிபதிகளே இருக்கிறார்கள். இதன் காரணமாகவே வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மதவாச்சியில் கடந்த 26 ஆம் திகதி நீதிமன்றக் கட்டடத் தொகுதியை திறந்துவைத்த பின்னர் உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

நீதிமன்ற வழக்குகள் தாமதமின்றி நிறைவடைவதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். அதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம்.

உலகில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டில் நீதிபதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகும். நாட்டில் 08 இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனினும் அவற்றை விசாரணை செய்து தீhப்பு வழங்குவதற்கு வெறும் 335 நீதிபதிகளே இருக்கிறார்கள். வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதற்கு இது பிரதான காரணமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறைக்கு சென்ற எம்.பியின் மருமகன் ; பிணையில் சென்ற மற்றொரு எம்.பியின் மகன்

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி...

முகமது மிஹிலர் முகமது அர்ஷத் கைது

திட்டமிட்ட குற்றத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய  பின்தொடர்பவரான நபர் ஒருவர்...

இலங்கை – துருக்கி இடையே பொருளாதார உறவுகளை விரிவுபடுத்த நடவடிக்கை

இலங்கைக்கும் துருக்கி குடியரசுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டுக்...

ரஷ்யாவில் விமான விபத்து பயணிகள் அனைவரும் உயிரிழப்பு

ரஷ்யாவின் தூர கிழக்கு அமுர் பகுதியில் விபத்துக்குள்ளான அங்காரா ஏர்லைன்ஸ் An-24...