Date:

ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்கவுக்கு தங்கம்

தென் கொரியாவில் நடைபெற்றுவரும் எறிதல் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று (22) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

அவர், 82.05 மீட்டர் துரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இப்போட்டியில் ஜப்பானிய தடகள வீரர் 78.60 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

77.43 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்த பாகிஸ்தானிய தடகள வீரர் இந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதனிடையே, பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் நதீஷா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அவர் 57.53 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார். இது அவரது தனிப்பட்ட புதிய அதிகபட்ச செயல்திறனாக கருதப்படுகின்றது.

இதேவேளை, இந்தப் போட்டியில் ஜப்பானிய தடகள வீராங்கனை 62.20 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தையும், சீன தடகள வீராங்கனை 57.47 மீட்டர் எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking ரணிலுக்கு பிணை

கோட்டை நீதவான் நீதிமன்றம் ரணிலுக்கு பிணை வழங்கியது. அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய...

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ரணில்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

ரணில் கைது: ஐ.தே.க ஆதரவாளர்கள் குவிந்தனர்

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

“PTA வர்த்தமானி அடுத்த மாதம் இரத்து”

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ஒழிப்பதற்கான வர்த்தமானி அடுத்த மாத தொடக்கத்தில்...