Date:

அரிசி விலையில் வீழ்ச்சி ஏற்படுமா?

அரசாங்கம் அரிசிக்கு விதித்துள்ள 65 ரூபா வரியை 20 ரூபாவால் குறைத்தால் அரிசியை இறக்குமதி செய்யத் தயாராக இருப்பதாக அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளா்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் சந்தையில் அரிசிக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதுடன் ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 225 ரூபாவாக அதிகரித்துள்ளது.

மேற்குறிப்பிட்டது போன்று வரி குறைக்கப்படுமாக இருந்தால் தட்டுப்பாடின்றி இந்தியாவிலிருந்து கீரி சம்பா மற்றும் பொன்னி சம்பா ஆகிய அரிசி வகைகளை இறக்குமதி செய்து 130 ரூபாவிலிருந்து 135 ரூபாவரையில் பெற்றுக்கொடுக்க முடியுமென அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளா்கள் சங்கத்தினா் மேலும் அறிவித்துள்ளனா். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள உர பிரச்சினையினால் எதிர்வரும் டிசம்பா் மாதத்திலிருந்து அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நுகர்வோருக்கு தேவையான அளவு சந்தையில் அரிசி கொள்வனவு செய்வதற்கு முடியாவிட்டால் அதற்கு தற்போதுள்ள அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படவுள்ள அரிசி தட்டுப்பாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமாயின் தற்போதிருந்தே அரிசி இறக்குமதி நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டியது அவசியமென உணவு பொருள் இறக்குமதியாளா்களின் சங்கம் மேலும் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கைக்கு விசா இல்லாத நுழையக்கூடிய நாடுகள்

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், அரசாங்கம் மேலும் 33 நாடுகளுக்கு...

ஜனாதிபதி பொதுமன்னிப்பு: சிறை கைதிக்கு கடூழிய சிறை

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட டபிள்யூ.எம்....

நாட்டின் 219 மருந்தகங்களுக்கு உரிமம் இரத்து – அமைச்சர் அறிவிப்பு

2025 ஜூலை 18 வரையிலான காலப்பகுதியில், நாட்டில் உள்ள 219 மருந்தகங்களின்...

IMF நிதி வசதி குறித்த ஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பரில்

இலங்கைக்கு வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வு...