Date:

சிறப்பு பொலிஸ் நடவடிக்கையில் 748 பேர் கைது! 26000 பேரிடம் சோதனை

நாடளாவிய ரீதியில் நேற்று (18) நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட, சந்தேகத்தின் பேரிலும் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும் மொத்தம் 748 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 26,560 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 18 நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

மேலும் 64 பேர் குடிபோதையில் வாகனம் செலுத்தியுள்ளனர், 26 பேர் பொறுப்பற்ற ஓட்டுநர்கள் மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களை மீறிய 3675 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களை கைது செய்ய நாடு முழுவதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சி.ஐ.டியில் ஆஜராகுமாறு ரணிலுக்கு அறிவிப்பு

இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும்...

6,000க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்களின் விசாக்கள் ரத்து – அமெரிக்கா அதிரடி!

அமெரிக்க சட்டத்தை மீறியதாலும், அதிக காலம் நாட்டில் தங்கியிருப்பதாலும் 6,000க்கும் மேற்பட்ட...

மீன் வியாபாரியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு – பேலியகொடையில் இன்று பதற்றம்

பேலியகொடை ஞானரதன மாவத்தைப் பகுதியில் இன்று (19) காலை துப்பாக்கிச் சூட்டுச்...

தபால் வேலைநிறுத்தம் இன்றும்

தபால் ஊழியர்கள் ஆரம்பித்த நாடளாவிய வேலைநிறுத்தம் இன்றும் (19) தொடரும் என்று...