Date:

சபாநாயகரினால் கௌரவிக்கப்பட்ட பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி ஹனான் அமின்

சபாநாயகரினால் கௌரவிக்கப்பட்
திறமைகளை வெளிக்காட்டிய பாராளுமன்ற உத்தியோகத்தர்களினது பிள்ளைகளைக் கௌரவித்து புலமைப்பரிசில் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி ஹனான் அமின் க.பொ.த. (சாதராண தரப்) பரீட்சையில் 9ஏ சித்திகளைப் பெற்றமைக்காக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்ரமரத்னவினால் பணப்பரிசு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் சபாநாயகருடன் பாராளுமன்ற செயலாளர் நாயகம், பிரதி பாராளுமன்ற செயலாளர் நாயகம், உதவிப் பாராளுமன்ற செயலாளர் நாயகம், படைக்கலச் சேவிதர், திணைக்களத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மோந்தா புயல் சூறாவளியாக வலுப்பெறுகிறது

வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. மோந்தா என்ற இந்த புயல் நாளை காலை சூறாவளியாக வலுப்பெற்று, மாலையில் ஆந்திரப் பிரதேச கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோந்தா புயல் காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

வெலிகம தவிசாளரின் பூதவுடலுக்கு சஜித் இறுதி அஞ்சலி

வெலிகம பிரதேச சபையில் பொது மக்கள் தினத்தன்று இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்...

பிக் டிக்கெட் வென்ற இலங்கையர்

அபுதாபி வாராந்திர பிரபலமான பிக் டிக்கெட் குழுக்களில் 63 வயதான வங்கியாளரான...