2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்காக, 30 இலங்கை மாணவர்களுக்கு சீன அரசாங்கம் முழுமையான புலமைப்பரிசில் உதவித்தொகையை வழங்கியுள்ளது.
கொழும்பில் உள்ள சீன தூதரகத்தில் உதவித்தொகைகளை கையளிக்கும் அதிகாரப்பூர்வ விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுரா செனவிரத்ன தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, 165 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.
பொறியியல் தொழில்நுட்பம், மருத்துவம், விவசாயம், கல்வி, முகாமைத்துவம் மற்றும் கலை ஆகிய துறைகளுக்காக இந்த புலமைப்பரிசில் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.