Date:

2025 ஜூலை இல் 200,244 சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000 ஐத் தாண்டியுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் 200,244 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்தனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது 6.6% அதிகமாகும்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் இந்தியாவிலிருந்து 37,128 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், இது 18.5% ஆகும்.

மேலும், ஜூலை மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 23,475 பேரும், நெதர்லாந்திலிருந்து 15,556 பேரும், சீனாவிலிருந்து 12,982 பேரும், பிரான்சிலிருந்து 11,059 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.

அதன்படி, 2025 ஜனவரி 01 முதல் ஜூலை 31 வரையான காலப்பகுதியில் இலங்கை வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,368,288 ஆகும்.

இவர்களில் 279,122 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தும், 131,377 பேர் ரஷ்யாவிலிருந்தும், 115,470 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும் வந்ததாக இலங்கை அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஒரே நாளில் 1,000 இற்கும் அதிகமான சுற்றிவளைப்புக்கள்; 1,284 பேர் கைது

விஷப் போதைப்பொருட்களை நாட்டிலிருந்து அகற்றும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கையின்...

இரட்டை கொலைத் தொடர்பில் 6 பேருக்கு மரண தண்டனை

அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு எதிராக மரண...

Breaking தலாவா பஸ் விபத்தில் உயர்தர மாணவன் உயிரிழப்பு

தலாவ ஜெயகங்கா பகுதியில் திங்கட்கிழமை (10) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் உயர்தர...

இலங்கை சவூதி அரேபியாவுடன் ஹஜ் உடன்படிக்கை

2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்காக இலங்கை சவூதி அரேபியாவுடன் ஹஜ்...