Date:

பாகிஸ்தானில் பாரிய நிலநடுக்கம் மக்கள் அதிர்ச்சி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை (03) அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் பீதியடைந்தனர். நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவில் இருந்ததாக பதிவாகி உள்ளது.

 

தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தகவல்களின்படி, இந்த நிலநடுக்கம் ஞாயிற்றுக்கிழமை (03) அதிகாலை 2:04 மணிக்கு 102 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. கைபர் பக்துன்க்வாவின் பெஷாவர், ஸ்வாட், மலாகண்ட், நவ்ஷேரா, சர்சத்தா, கரக், திர், மர்தான், முகமது, ஷாங்க்லா, ஹங்கு, ஸ்வாபி, ஹரிபூர் மற்றும் அபோட்டாபாத் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர், அட்டோக், டாக்ஸிலா, முர்ரி, சியால்கோட், குஜ்ரான்வாலா, குஜராத், ஷேக்குபுரா, ஃபெரோஸ்வாலா, முரிட்கே மற்றும் பஞ்சாபின் பிற பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மக்களிடம் பீதியை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர் அல்லது சொத்து இழப்பு எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பாராளுமன்ற விவாதம்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை ஐக்கிய...

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க அங்கிகாரம்

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்...

குரங்கினால் மின்சார தடை? PUCSL இன் பகிரங்க விசாரணை ஆரம்பம்

இலங்கை மின்சார சபையின் பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில்...

பாலஸ்தீனத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் இலங்கையில் ஆரம்பம்

இரு அரசு தீர்வை செயல்படுத்துவது உட்பட, பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க உள்நாட்டிலும் சர்வதேச...