ஞானசார தேரரின் தலைமையில் ‘ஒரு நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.
“இலங்கையினுள் ஒரே நாடு, ஒரு சட்டம் என்பதைச் செயற்படுத்துதல் தொடர்பாக கற்றாராய்ந்து அதற்காகச் சட்டவரைவொன்றை தயாரித்தல்” உள்ளிட்ட பெறுப்புகள் குறித்த செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளன.
13 உறுப்பினர்களைக் கொண்ட இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.