Date:

ஸபர் மாதத்திற்கான தலைப்பிறை…

ஹிஜ்ரி 1447 ஸபர் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு  ஜுலை மாதம் 25 ஆம் திகதி மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.


பிறைக் குழு பிரதித் தலைவர் மெளலவி ஏ.எல்.எம். ரிழா அல் மக்தூமி தலைமையில் இடம்பெற்ற மாநாட்டில்
ஸபர் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாததால் நாளை மாலை (26) சனிக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு புனித ஸபர் மாதம் ஆரம்பமாவதாக
இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு பிறைக் குழுவின் பிரதித் தலைவர் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிறை பார்க்கும் மாநாட்டில் பெரிய பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் ரசீன் உள்ளிட்ட பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், பிறைக் குழு உறுப்பினர்கள் , அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை தலைவர் அஷ் ஷெய்க் றிஸ்வி முப்தி மற்றும் உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள வக்பு பிரிவு பொறுப்பாளர் ஏ.எஸ்.எம்.ஜாவித், ஏனைய பள்ளி வாசல்கள், ஸாவியாக்கள் , தரீக்காக்களின் பிரதிநிதிகள், மேமன் சங்க பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

ஏ.எஸ்.எம்.ஜாவித்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள் மடம்: உயிருடன் இருந்தால் தண்டனை”

குருக்கள் மடம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது நீதி கிடைக்கும். அதேநேரம்...

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...