Date:

கடத்தப்பட்ட பாடசாலை சிறுவன், வெள்ளை வேனில் இருந்து குதித்து தப்பி வந்தான்

கஹதுடுவ பகுதியில் வைத்து வெள்ளை வேனில் கடத்தப்பட்ட  15 வயதுடைய சிறுவன் இரத்தினபுரி பகுதியில் வைத்து வேனில் இருந்து குதித்து தப்பிச் சென்ற சம்பவம் புதன்கிழமை (16) அன்று இடம்பெற்றுள்ளது.

 

சிறுவனை கடத்தியதாக கூறப்படும் நபர்களை கைது செய்ய சிறப்பு விசாரணை ஆரம்பித்துள்ளதாக கஹதுடுவ பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பிலியந்தலையில் உள்ள ஒரு தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் குறித்த சிறுவன், வெள்ளிக்கிழமை (16) மாலை 4.00 மணியளவில் பிரத்தியேக வகுப்பில் கலந்து கொள்வதற்காக தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, கஹத்துடுவ மயானத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வேனில் வந்த குழுவினரால்   சைக்கிளுடன் கடத்தப்பட்டதாக பொலிஸாரிடம் சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அரச வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க புதிய நடைமுறை

அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக டிஜிட்டல் அட்டை (Digital...

சம்பா மற்றும் கீரிசம்பா நெல்லுக்கான விலை அதிகரிப்பு

உள்நாட்டு நெற்செய்கையை ஊக்குவிக்கும் வகையில், சம்பா மற்றும் கீரிசம்பா நெல்லுக்கான அரசாங்கத்தின்...

Breaking News விமலின் சத்தியாகிரகம் நிறைவு

தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை...

ஓராண்டு காலம் தாமதமாகும் ஆறாம் தர கல்விச் சீர்திருத்தம்!

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 6 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு...